2025 மே 01, வியாழக்கிழமை

ஜோசப் பரராஜசிங்கத்தின் 8வது நினைவு தினம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 30 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஏற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 8வது நினைவுதினம் மட்டக்களப்பு கோப்பின் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆன்மீகவுரையினை ஆயர் நிகழ்த்தியதுடன் 'பின்-நிலைமாறுகால நீதியும் தமிழின படுகொலையும்' என்ற தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக பகுதி நேர விரிவுரையாளர் அருட்தந்தை எழில் றஜன்; விசேட சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டோர் உரையாற்றியதுடன் கட்சியின் முக்கிஸ்த்தர்களும் உரை நிகழ்த்தினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .