Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கடந்த 11 மாதம் வரையிலான காலப் பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 92 பேரை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தண்டப்பணம் செலுத்த வைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மாத்திரம் 2015 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று புதன்கிழமை வரை மதுபோதையில் வாகனம் செலுத்திய 92 பேரை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் கைது செய்து அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டப்பணம் செலுத்த வைத்துள்ளனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் மது போதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
இதேவேளை, ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இன்று வரை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 77 விபத்துகள் இடம்பெற்றுள்ளன.இதில் பாரிய விபத்துக்களினால் 10 பேர் மரணத்துள்ளனர்.
கடந்த வருடம் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 92விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாரிய விபத்துக்களினால் 8 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் இப் பொலிஸ் பிரிவில் வீதி விபத்துக்கள் குறைந்து காணப்படுவதோடு பாரிய விபத்துக்களினால் மரணத்தை தழுவியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
மேலும்,மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்செய்து அவர்களிடம் இருந்து 7500ரூபாய், 10,000ரூபாய், 15,000 ரூபாய், 20000.00 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் குறித்த வீதி விபத்துக்கள் மற்றும் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago