2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'ஏற்றுக்கொண்ட விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 15 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
 
வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின்  வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்கிழமை (14)  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'ஜெனீவா மனித  உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று  கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை  அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை.
 
இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற இறுக்கமான நிபந்தனையுடன் கண்டிப்பான உத்தரவை மனித உரிமைப் பேரவை பிறப்பித்துள்ளது. கால அவகாசம் கேட்பது இலங்கை அரசாங்கம். கொடுப்பது மனித உரிமைப் பேரவை' என்றார்.

'மேலும், கால அவகாசம் கொடுக்கக்கூடாது, கால அவகாசம் கொடுக்க வேண்டும் என விடயத்தில் முரணான செய்திகளை வெளியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரித்தாளும் தந்திரோபாயங்களும்  சில ஊடகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில்  நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .