2025 மே 07, புதன்கிழமை

'கைதிகள் சிறையில் வாடுவதை ஏற்கமுடியாது'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதுடன், நல்லாட்சி அரசாங்கத்தில் பொதுமன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களென்று எதிர்பார்த்தோம். ஆனால், இந்த எண்ணப்பாட்டை நல்லாட்சி அரசாங்கம் வெளிப்படுத்தவில்லையென்பது கவலையளிக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்புச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதத்தை இளநீர் வழங்கி இன்று செவ்வாய்க்கிழமை  முடித்துவைத்தனர். இதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த காலத்தில் பல பொதுமன்னிப்புத் திட்டங்களில் பலர் விடுதலை செய்யப்பட்டபோதிலும், தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படாமை கவலைக்குரிய விடயமாகும்' என்றார்.

'தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் முயற்சிகளை  எடுத்துவந்தது. ஆனால், இதனை தமிழ் அரசியல் உணரவில்லையென்பதை அறிகிறோம். உண்மையில்  தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்படவேண்டிய விடயம். எனினும், புனர்வாழ்வளித்து அரசாங்கம் விடுதலை செய்ய எடுத்துள்ள நடவடிக்கையையிட்டு ஓரளவு திருப்தியடைகிறோம்' எனவும் அவர் தெரிவித்தார்.  

'மேலும், நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான பாரிய முயற்சியை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டது. ஒரு காலத்திலும் இல்லாத வகையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளித்தோம். வரவு –செலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்தோம். இந்த நாட்டில் எந்தச் சுதந்திர தினத்துக்கும்  த.தே.கூ. கலந்துகொள்ளாத நிலையிலும், இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் சுதந்திர தினத்தில் எமது தலைவர் கலந்துகொண்டு உற்சாகம் வழங்கினார்'; எனவும் அவர் தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X