2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேக்குமரக் குற்றிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, தொப்பிகலப் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் தேக்குமரக் குற்றிகள் 42ஐ  இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட இம்மரக்குற்றிகளை விற்பனை செய்யும் நோக்கில் கொண்டுசெல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்தன என்பதுடன், இக்குற்றிகள் ஒவ்வொன்றும் 6 முதல் 14 அடி நீளமுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காட்டுப்பகுதியில் மரக்குற்றிகள் காணப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சென்று தேடுதல் நடத்தியபோது இம்மரக்குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதேவேளை, சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X