2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

'தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் உறவு மேலும் வலுவூட்டப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 ஜூன் 21 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் உறவு மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள் அறிக்கையில், 'தமிழ் பேசும் சமூகங்களின் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், பொது நல அக்கறையுள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள் என எல்லோரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களிடையே விரிசல் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று சிங்கள தேசியவாத அமைப்புக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும் அதனை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான நிலையை வடக்கு, கிழக்கு மாகாண மக்களும் அனுபவிக்கின்றனர். எனினும், நிலையான சமாதானம், நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு,  ஒற்றுமை மேலும் அதிகரிக்க வேண்டும். ஆனால், கிழக்கு மாகாணத்தில் அண்மைக்கால போக்குகள் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர். ஆகவே, இதனை சரிசெய்ய தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைமைகள், இயக்கங்கள், அமைப்புக்கள், மத ஸ்தலங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரு சமூகங்களும் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் பல உள்ளன. மீள்குடியேற்றம், காணி சுவீகரிப்பு, இராணுவத் தலையீடுகள் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் நாம் ஒன்றினைந்து செயலாற்ற வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X