2025 மே 09, வெள்ளிக்கிழமை

'தமிழ் மக்கள் இழந்ததை கல்வியினால் அடையமுடியும்'

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ் மக்கள் இழந்தவற்றை கல்வியினால் மட்டுமே அடைய முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கை,  செங்கலடியிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த கால நிலைமை பற்றி பேசிக்கொண்டு நாம் பின்நோக்கிச் செல்ல முடியாது. நாங்கள் முன்னேற வேண்டியுள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கு சிறந்த ஆயுதமாக இருப்பது கல்வியாகும். கல்வியில் பலமடைவதன் மூலம் நாம் இழந்தவற்றை மீள அடைய முடியும்' என்றார்.


 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X