2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'நாட்டை இலஞ்சமும் ஊழலும் சீரழிக்கும்'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலஞ்சம், ஊழல் ஒரு நாட்டையே சீரழிக்குமென காத்தான்குடிப் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

இலஞ்சம், ஊழல் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு காத்தான்குடிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (23) மாலை நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போது இலஞ்சம்,  ஊழல்  எல்லா இடங்களிலும் தலை விரித்தாடுகின்றது. ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு இலஞ்சம், ஊழல் ஒரு சாபக்கேடாகும். இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடினால் அந்த நாடே சீரழிந்துவிடும். இலஞ்சம், ஊழல் தலை விரித்தாடுமாக இருந்தால்,  ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X