2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'நீதி வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடமலை ராஜ்குமார், எம்.எஸ்.எம்.நூர்தீன்,  ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.பாக்கியநாதன், எஸ்.கார்த்திகேசு, வடிவேல் சக்திவேல்

மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை, அம்பாறை   மாவட்டங்களில் இன்று(16) ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட நீதிப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பணிக்குழுவின் அறிக்கையை உடனடியாக  அமுல்படுத்த வேண்டும், நிலைமாறு கால நீதிக்கான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தபோது,'எமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் மௌனம் காக்கின்றது. இந்நிலையில், எந்த அரசாங்கம் வந்தாலும், எமக்கு நீதி கிடைக்காது என்ற மனநிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே,  சர்வதேசமே எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்

மேலும், காணாமல் போன எமது உறவுகளின் நிலைமை தொடர்பில் உறுதியான பதில் கிடைக்கும் வரையில் எமது போராட்டங்கள் ஓயப்போவதில்லை' என்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .