2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுகிறோம்'

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல்தரைப் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணமாகவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்;பினர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இதற்குரிய தீர்வை நோக்கிச் செயற்பட்டு வருவதாகவும் கிழக்கு மகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

நாங்கள் மாடுகளை மேய்ப்பதற்கு இடங்களைத் தேடிச் சென்றால் நாங்கள் இருக்கும் இடங்களில் புத்த விகாரை  அமைப்பதற்கும் புத்தர் சிலை வைப்பதற்கும் வருகின்றார்கள் எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச 100 கால்நடை பண்ணையாளர்களுக்கு உலக தரிசன நிறுவனத்தின் உதவியுடன் இலவசமாக பால் கொள்கலன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலையத்தில் வியாழக்கிழமை (17) மாலை கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மேய்ச்சல்தரைப் பிரச்சினைகள் உள்ளிட்ட இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் எமது தலைவர்; இரா.சம்பந்தன் ஜானதிபதியுடனும் பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி உரிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு போராடி வருகின்றார். ஆகவே நாம் இன்னும் சோதனைகளுடன்தான் இருந்து வருகின்றோம். அதற்காக நாம் சோர்ந்துபோகவோ எமது கால்நடைகளை விற்றுவிடவோ, விகாரைகளை அமைக்கவோ விடமுடியாது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம், அவற்றுக்கு எம்மை ஆக்கிக் கொண்டவர்களாக நாம் மாறவேண்டும்.
பொரும்பான்மை மக்களை இங்கு குடியேற்றும் திட்டங்கள் அரசாங்கத்திடம்; இல்லவிட்டாலும் சில சம்பவங்கள் அரங்கேறுவதற்கான சில சம்மபவங்கள்கூட இடம்பெற்றிருக்கின்றன.

நாம் அரசமரத்துப் பிள்ளையார் என சொல்கின்றோம் ஆனால் அவர் அரச மரத்தைக் காண்டால் புத்தர் சிலை வைக்கின்றார்;. இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியிலும் எதிர்காலத்தில் இடம்பெறலாம். அவ்வாறெனின் மக்கள் உடனுக்குடன் எமக்கு தகவல்களை அறிவிக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X