2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'மணல் வீதிகள் கிறவல் வீதிகளாகப் புனரமைக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 16 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் மணல் வீதிகளை கிறவல் வீதிகளாகப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநகர சபையின் ஆணையாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கான  அபிவிருத்திக் குழுக் கூட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.  

இதன்போது, மண்முனை வடக்குப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

கடந்த வருடத்தில் மண்முனை வடக்குப் பிரதேசத்தில்  916 அபிவிருத்தித் திட்டங்களுக்காக  சுமார் 84 மில்லியன் ரூபாய் நிதி  செலவிடப்பட்டதுடன், மேற்படி திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என அப்பிரதேச செயலாளர் என்.குணநாதன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .