2025 மே 09, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்கள், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.  களுவாஞ்சிக்குடியை சேர்ந்த எஸ்.யதுசன் (வயது 22),  திருப்பழுகாமத்தைச் சேர்ந்த கே.தர்மகீர்த்தி (வயது 21) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X