2025 மே 01, வியாழக்கிழமை

10 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அலுவலகம் திறப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


கிழக்கு மாகாண மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் குறிஞ்சாமுனையில்; ரூபாய் 10 மில்லியன்; செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிமனைக்கான புதிய கட்டடம்; திங்கட்கிழமை (20) கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசானாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி பணிமனை இதுவரை காலமும் பிரதேச சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்தது. 

வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் ஜனாதிபதியின் கிழக்கு மாகாண ஆலோசகரும் மாகாண சபை உறுப்பினருமாகிய சி.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், பிளான் ஸ்ரீ லங்கா வதிவிடப் பிரதிநிதி எட்வேர்ட் ரி எஸ்பே உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .