Menaka Mookandi / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)
கிழக்கு மாகாண சபையின் அனுசரணையுடன் யுத்தம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சுமார் 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று காலை வழங்கிவைத்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக நெக்டெப் நிறுவனமும் கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சும் இவ்வுபகரணங்களை வழங்கியுள்ளது. இன்று காலை கல்லடியிலுள்ள மாகாண கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மாகாண அமைச்சர் ரி.நவரட்ணராஜா உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago