2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மஞ்சள் கடவையில் வாகனம் மோதி மாணவன் பலி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 03 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் மாணவரொருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

தெய்வநாயகம் சியாம்பவன் (வயது 16) என்ற மாணவரே விபத்தில் பலியானவராவர்.

மஞ்சள் கடவையை கடக்க முற்பட்ட இம்மாணவர்  மீது வாகனமொன்று மோதி இவ்விபத்து சம்பவித்தது.  ஒரு வாகனத்தை மற்றுமொரு வாகனம் முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து சம்பவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
சடலம் செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .