2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

திண்மக்கழிவகற்றும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(லோஹித், எம்.சுக்ரி)

கிழக்க மாகாணத்தில் திண்மக்கழிவகற்றும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான செயலமர்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சரித்த ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட மேலதிக அராசங்க அதிபர் கே.விமலநாதன், மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், அதன் செயலாளர்கள், சுற்றாடல் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திண்மக்கழிவுகளை செயற்பாட்டுக்குட்படுத்தி மண்வளத்தினை அதிகரிப்பதுடன்,  மரம் செடி கொடிகளின் வளர்சிச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் திண்மக்கழிவுகளை அகற்றி அவற்றினை மீள் சுழற்சி செற்வதற்கான இடங்களினைக் கண்டுபிடித்தல், உள்ளூராட்சி நிறுவனங்கள் கழிவுகளை வெறியேற்றுதல் தொட்ர்பான தகவல்களை திரட்டுதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல் தொடர்பானதும் ஒன்றுசேர்த்தல் தொடர்பானதுக்குமான மத்திய நிலையத்தினை உருவாக்குதல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

இச் செயற்திட்டத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவி, ஆலோசனைகள் வழங்கி நிறுவன ரீதியான பலத்தனை ஏற்படுத்தும் வகையில் இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இக் கலந்துரையாடலில், நகர சபை, பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இச் செயற்திட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 164 தொன் திண்மக் கழிவுகள் அகற்றப்படுகின்ற நிலையில் அவற்றினை மீள் சுழற்சி அடிப்படையில் பசளையாக்கி குப்பைகளற்ற சூழலை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தினை  நடைமுறப்படுத்துவதற்கான முதல்கட்ட கொடுப்பனவும் இதன்போது வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .