2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மரத்தில் மாங்காய் பறித்தவர் கீழே விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்துக்கொண்டிருந்த ஒருவர் அம்மரக்கிளை முறிந்ததால் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியிலேயே நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்திவெளியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மனோகரன் (வயது 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது நண்பரின் வளவிலிருந்த மாமரத்தில் ஏறி மாங்காய்களைப் பறிக்கமுற்பட்டபோது, அம்மரத்திலுள்ள கிளையொன்று முறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

உடனடியாக சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதே உயிரிழந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X