2026 மே 14, வியாழக்கிழமை

ஏறாவூரில் வீதி அபிவிருத்திப் பெருவிழா

Menaka Mookandi   / 2013 ஜூலை 03 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'புறநெகும திட்டத்தின் கீழ் சுமார் 10 மில்லியன் ரூபாய் செலவில் கொங்றீட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஓடாவியார் றிபாய் பள்ளி வீதி திறப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா கலந்து கொண்டார். புறநெகும திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் நகரசபை வட்டாரத்திலேயே ஆகக் கூடுதலான வீதி அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன.

ஏறாவூர் நகரில் பள்ளமும் படுகுழியுமாகக் காணப்பட்ட சுமார் 90 வீதமான உள்ளூர் வீதிகள் கொங்றீற் இட்டு நவீன மயமாக மாற்றப்பட்டுள்ளதனால் இனி வரும் மழைப்பருவ காலங்களில் பொது மக்களும் மாணவரும் ஏனையோரும் சிரமமில்லாது பயணிக்கக் கூடியதாக வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது எனவும் இது வரலாற்றில் ஓர் திருப்பம் எனவும் நிகழ்வில் உரையாற்றிய ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லீன், செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .