2025 மே 05, திங்கட்கிழமை

கல்லடி புதிய பாலத்தில் வீழ்ந்தவர் காப்பாற்றப்பட்டார்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தில் தவறி வீழ்ந்த ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களில் ஒருவரே இன்று பாலத்தினுள் விழுந்துள்ளார்.

இதன் போது அவ்விடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஏனையோர் இவரை காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தை சேர்ந்த ஏ.கந்தசாமி(60) என்பவரே இவ்வாறு கல்லடிப்பாலத்தில் விழுந்தவர் என தெரியவருகின்றது.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X