2025 மே 05, திங்கட்கிழமை

சடலம் மீட்பு; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப் பகுதியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அன்னை வேளாங்கண்ணி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  ஒரு பிள்ளையின் தந்தையான கந்தமூர்த்தி புவனேந்திரன் என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் பல இடங்களில் குத்துக்காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவியினுடைய மறைமுகமான காதலன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருடன் இவர் வாழ்ந்துவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X