2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா

Super User   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த வைபவம் கிழக்கு பலக்லைக்கழக வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

2010, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

கிழக்கு பலக்லைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பு கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ஏ.அன்ரோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கலைப்பிரிவு பட்டதாரிகள் 44 பேருக்கும் வர்த்தக முகாமைத்துவம் பட்டதாரிகள் 19 பேருக்கும் வர்த்தக பட்டதாரிகள் 2 பேருக்கும் திருகோணமலை வளாகத்தில் கற்கை நெறியை பூர்த்தி செய்த விஞ்ஞான முகாமைத்துவ பட்டதாரிகள் 22 பேருக்கும இதன்போது பட்டங்கள் வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X