2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் உளநலம் தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் உளநல தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அனுசரணையுடன் இந்தச் செயலமர்வு நடத்தப்பட்டது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சல்மா ஹம்சா,  உளநல உத்தியோகத்தர் எஸ்.வித்தியானந்தன், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X