2025 மே 03, சனிக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கறுவாக்கேணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த மீன் வியாபாரி சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

வைரவர் கோயில் வீதி கிரானைச் சேர்ந்த 39 வயதான கணபதிப்பிள்ளை பாஸ்கரன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இவர் மோட்டார் சைக்கிளில்  ஓட்டமாவடிக்குச் சென்று மீன் விற்பனை செய்துவிட்டு கிரானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, இவரை பஸ் வண்டி ஒன்று மோதியுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X