2025 மே 02, வெள்ளிக்கிழமை

கைக்குழந்தை மீட்பு

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை, வாகனேரி - குடாமுனைக்கல் பகுதியில் வீதியின் ஓரத்தில் சொப்பிங் பேக்கில் போடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மாடு மேய்த்துக் கொண்டுவந்த சிறுவர்கள் மூவர் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு பார்த்தபோது சொப்பிங் பேக்கில் போடப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு  வாகனேரி பிள்ளையார் கோவில் தலைவரிடம் சென்று தெரியப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அவர் கிராம சேவகரின் உதவியுடன் வாழைச்சேனை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட – நீதவான் நீதிமன்ற  பதில் நீதவான் எம்.பி.எம்.ஹூஸைன் குழந்தையின் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு விடுத்த உத்தரவின் பேரில்   குழந்தையின் சடலம் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சொப்பிங் பேக்கில் போடப்பட்ட நிலையில் போடப்பட்ட குழந்தை குறை மாதத்தில் பிறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பிரதேசத்திற்குப் பொருப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X