2025 மே 02, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் எட்டுப் பேர் காயம்

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன், வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

கல்முனையில்  இருந்து மட்டக்களப்பு  நோக்கிச் சென்ற   தனியார்  பஸ் வண்டியும்   மட்டக்களப்பில்  இருந்து  அக்கரைப்பற்று நோக்கி வந்த  இலங்கை  போக்குவரத்து சபையின்  பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வீதி விபத்தில் காயமடைந்தவர்கள் செட்டிபாளையம் பிரதேச  வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு  போதனா  வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி  பொலிஸார்  மேற்கொண்டு  வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X