2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மனைவியை தாரை வார்த்த கணவர்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ரூபி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ரூபிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் மனோஜ்க்கு தெரிய வந்தது. அவர் மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ் வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அப்போது ரூபி தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார். பின்னர் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர்.

வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மனோஜ் திடீரென வீட்டிற்கு வந்தார்.

அப்போது ரூபி தனது கள்ளக்காதலுடன் படுக்கையில் ஒன்றாக இருந்தார். இதனை கண்டு மனோஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர்களை அறைக்குள் பூட்டி வைத்தார். ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற அவர் தனியாக இருந்து சிந்தித்தார். சிறிது நேரத்தில் அவர் முற்றிலும் கோபம் மறைந்து போனது.

தனது மனைவியை கள்ளக்காதலனுக்கு தாரை வார்க்க முடிவு செய்தார்.

இதையடுத்து ரூபியின் பெற்றோருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர்களிடம் சமாதானம் செய்து திருமணத்திற்கு ஒப்புதல் வாங்கினார்.

மனோஜ் தனது மனைவியை அவரது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ரூபிக்கு மனோஜ் ஒப்பந்த கடிதம் எழுதினார். அதில் இனி எனக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீ மகிழ்ச்சியாக புது கணவருடன் குடும்பம் நடத்து என எழுதி கொடுத்தார்.

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .