2025 மே 02, வெள்ளிக்கிழமை

கைவினை உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கைவினை உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் கைவினை உள்ளுர் உற்பத்தி திறனாக ஒருநாள் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கமையவும் வழிகாட்டலுக்கமையவும் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில்  மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் தி.மலர்ச்செல்வன், பேராசிரியர் சி.மௌனகுரு, உட்பட கலாசார அபிவிருத்தி உத்தியேகாத்தர்கள், கைவினை உள்ளூர் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது வெண்கலப் பொருட்கள், பண்பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள், ஆபரணங்கள் ஆகியன பற்றி  கருத்துரைகள் வழங்கப்பட்டன. மேலும், இந்தச் செயலமர்வில் கருத்துப் பரிமாறல்களும் நடைபெற்றதுடன், கைவினை உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X