2025 மே 01, வியாழக்கிழமை

மின் தாக்கி கீழே விழுந்த சிறுவன் காயம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கிரான் பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மின்  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் படுகாயமடைந்துள்ளான்.

நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்தச்  சிறுவன் தனது நண்பர்களுடன் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது பட்டம்  மின்கம்பத்தில் சிக்கியுள்ளது.  மின்கம்பத்தில் சிக்கிய பட்டத்தை  எடுப்பதற்கு இந்தச் சிறுவன் மின்கம்பத்தில் ஏறியபோது  மின் தாக்குதலுக்கு உள்ளாகி கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறங்கியாமடு கிரானைச் சேர்ந்த ஆர்.தவனீதன் (வயது 15) என்ற சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளான்;.

உடனடியாக வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுவன், பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .