2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியுள்ள பெண்களுக்கு வலுவூட்டும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 25 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'இடம்பெயர்ந்த பெண்கள் தீர்மானம் எடுத்தலிலும் பொருளாதார வலுவூட்டலிலும் பங்கு பற்றுதலுக்கு ஏற்ற சூழலிற்கு சக்தியளித்தல்' எனும் தலைப்பிலான விழிப்புணர்வு செயலமர்வொன்று வவுணதீவு பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை (25) நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்கும் நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி ஏ.எல்.அப்துல் அஸீஸ் உட்பட பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்கும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ள பெண்களுக்கு வலுவூட்டும் வேலைத்திட்டமொன்று பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி நிறுவனம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரலாயத்தின் உதவியுடன் இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
இத்திட்டத்திற்கமைவாக, மேற்படி செயலமர்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .