2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்திற்கு புத்தகங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பொதுநூலகத்திற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் புத்தகங்களை கையளித்துள்ளார்.

மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் பன்முகப்படுத்தப்பட்ட 150,000 ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டு நூலகத்திற்கு வழங்கப்பட்டன.

மேற்படி நகரசபையின் தவிசாளர்,  செயலாளர் ஆகியோரிடம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டன.

தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் காத்தான்குடி பொதுநூலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .