2025 மே 01, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை, முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய கல்வி ஊக்குவிப்பு சமூகப் பணித் திட்டத்தின் கீழ், நேற்று செவ்வாய்க்கிழமை இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய பரிபாலனசபைச் செயலாளரும் சமூக சேவகருமான வி.பிரபாகரன் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், செங்கலடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .