2025 மே 02, வெள்ளிக்கிழமை

நகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரியை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரான எம்.சாபிரை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போது சந்தேக நபர் ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.இதனையடுத்தே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி புதிய காத்தான்குடி பதுறியா ஜும் ஆ பள்ளிவாயல் குறுக்கு வீதியிலுள்ள தனது வீட்டுக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த போது அந்த வீதியினால் மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்; எம்.அலி சப்ரி தலைக்கவசத்தினால்(ஹெல்மட்) தாக்கி விட்டு தப்பிச் சென்றிருந்தார்.

காயமடைந்த நகர சபை உறுப்பினர் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தாக்கியதாக கூறப்படும்  சந்தேக நபரை காத்தான்குடி பொலிசார் தேடி வந்த நிலையில் நேற்று இவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாம் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாகவும் காத்தான்குடி பொலிசாh மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .