2025 மே 03, சனிக்கிழமை

டெங்கொழிப்பு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 11 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


டெங்கொழிப்பு வாரத்தையிட்டு சுகாதார திணைக்களம், பொலிஸ் மற்றும் பிரதேச சபை இணைந்து மட்டக்களப்பு செங்கலடி நகரில் டெங்கொழிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டன.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் செங்கலடி பிரதே சபை ஊழியர்களின் பங்கேற்புடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

செங்கலடி பிரதேச சபை முன்றலில் ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம்  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சென்றடைந்தது.
இதன்போது டெங்கு பரவுதலை தடுப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X