2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக புதிய கட்டிட திறப்பு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

555 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய நுழைவாயில் மற்றும் புதிய கட்டிடங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம்  சனிக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணண் கோபிந்தராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவூத், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை திருமதி சானிகா ஹிரும்புரேகம மற்றும் அமைச்சின் அதிகாரிகளும், கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள,; உத்தியேகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த அபிவிருத்தித்திட்டங்களில், 7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில், 230 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டிடத் தொகுதி, 121 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டிடத் தொகுதி, 171 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டிடத் தொகுதி, 25 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு என்பன அடங்குகின்றன.

புதிய துணைவேந்தர் கிழக்குப் பல்கலைக்கத்திற்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் பௌதீக, கல்வி மேம்பாடு கருதி மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்திட்டங்களின் ஒருபகுதியாக இது அமைவதுடன் இதற்கு முன்னரும் ஆயிரம் மில்லியனுக்கும் அதிக பெறுமதியான அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X