2025 மே 02, வெள்ளிக்கிழமை

புலிகளின் பாடல்களை கைப்பேசியில் வைத்திருந்தவர் கைது

Kogilavani   / 2014 மே 20 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவரை வெல்லாவெளி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை(18) கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது கையடக்கத்தொலைபேசி மற்றும் பென்ரைவ் என்பவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, இவரது கையடக்கத் தொலைபேசியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .