2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


தனியார் துறையினரின் உதவியையும் பெற்றுக்கொண்டு கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக சுற்றுலாத்துறையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாகாண அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஆர்.ஞானசேகரன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எஸ்.ஜெயவீர, ஏசியா பௌன்டேசன் அமைப்பின் வதிவிட பிரதிநிதி டினேசா டி.சில்வா விக்கிரம நாயக்க மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் உறையாற்றிய அவர்,

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை உலகறியச் செய்வதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
மாகாண சபையின் வளங்கள் வரையறுக்கப்பட்டிருப்பதால் தனியார் துறையினரின் உதவியுடன் இத்துறையை அபிவிருத்தி செய்ய முடியும். 
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மூலம் கூடுதல் பங்களிப்பை செய்ய முடியும்.
இத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வருகின்றோம்.
மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடுகள் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதால் தனியார் துறையின் உதவியுடன் இத்துறை அபிவிருத்தி செய்யப்படும்.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பாக உலகறியச் செய்வதற்கான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளது. இதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பு அவசியம்.

யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தற்பொழுது இயல்பு நிலைக்குத் திரும்பி இருப்பதுடன் அபிவிருத்தியை நோக்கி முன்னேறி வருகிறது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதில் நாம் உறுதியாகவே இருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா மையங்கள் இருக்கின்றன. நீர் விளையாட்டுக்களை நிகழ்த்தக்கூடிய பல்வேறு இடங்கள் உள்ளன. இவற்றை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாற்றி அமைக்க முடியும்' என அமைச்சர் நஸீர் அஹமட் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .