2025 மே 02, வெள்ளிக்கிழமை

நிதி அமைச்சின் செயலாளர் மட்டக்களப்பு விஜயம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்
,எஸ். பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,தேவ அச்சுதன்.

நிதி அமைச்சின் செயலாளரும்  திறைசேரியின் செயலாளருமான கலாநிதி பி.பி.ஜெயசுந்தர இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு விஜயம் செய்த அவரை,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மலர் மாலை அணிவித்து வரவேற்றார்.

காந்தி பூங்கா மற்றும் நகரின் அபிவிருத்திப்பணிகளை பார்வையிட்ட அவர் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்றார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.கிரிதரன் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .