2025 மே 01, வியாழக்கிழமை

காட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Super User   / 2014 ஜூன் 04 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

வாகரை பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கட்டுத்துப்பாக்கி  ஒன்றினை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை  புதன்கிழமை (04) கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
 
சின்னத்தட்டுமுனை வாகரையைச் சேர்ந்த மோ.சுபாஸ்கரன் வயது (24) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாதாகவும் இவரிடமிருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரை வாகரை சுற்றுலா நீதிவான் நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .