2025 மே 01, வியாழக்கிழமை

தந்தையின் ஜனாசாவை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்கள்: மகன் சாட்சியம்

Kanagaraj   / 2014 ஜூன் 08 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்

எனது தந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கட்டிருக்கும் இடத்தினை கண்டு பிடித்து  ஜனாசாவை தோண்டியெடுத்து இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்கள் என காத்தான்குடியில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட அப்தல் லத்தீப் என்பவரின் மகனான அப்துல் லத்தீப் அம்ஜத் தெரிவித்தார்.

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விசாரணை காத்தான்குடி பிரசேத செயலகத்தில் சனிக்கிழமை, நடை பெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், எனது தந்தை அப்துல் லத்தீப் 20.05.1985ம் ஆண்டு கொக்கட்டிச்சோலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

எனது தந்தைக்கு எந்தவிதமானதொரு பிரச்சினையும் இருக்கவில்லை. அவர் கொக்கட்டிச்சோலையில் ஒரு வேலை விடயமாக சென்றிருந்தார். நாங்கள் அப்போது மண்முனையில் வசித்து வந்தோம். எனது தந்தை கொக்கட்டிச்சோலைக்கு சென்று வீடு திரும்பாததால் நாங்கள் அவரை தேடினோம்.

பின்னர் ஓரிரு தினங்களில் ஒரு குழு எங்களது வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்து விட்டதாக கூறி அவருக்கான கடமைகளை செய்யுமாறும் தெரிவிட்டு சென்றுள்ளது.

இதையடுத்து எனது தாய் எனது வாப்பாவுக்கான இஸ்லாமிய இத்தாக்கடமையை மேற் கொண்டார். 

நாங்கள் மூன்று பிள்ளைகள், தந்தை கடத்தப்படும் போது நாங்கள் மூவருமே எங்கள் தாய் எங்களை  எங்களை மிகவும் கஸ்டப்பட்டு வளர்த்துள்ளார். இந் நிலையில் எனது தந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கட்டிருக்கும் இடத்தினை கண்டு பிடித்து அதை தோண்டி எனது எனது தந்தையின் உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உதவுங்கள் என்றார்.

எம்.சாலிஹா உம்மா சாட்சியமளிக்கையில்

எனது கனவர் உட்பட  முப்பது பேர் ஒரே தினத்தில் கடத்தப்பட்டதாக  எம்.சாலிஹா உம்மா தெரிவித்தார்.

30.12.1987ம் திகதி எனது கணவர் முகம்மது தம்பி அகமது லெல்வை என்பவர் கடத்தப்பட்டார். கடத்தப்படும் போது அவருக்கு 59 வயதாகும்.
மேற்படி தினத்தன்று எனது கணவருடன் சேர்த்து முப்பது பேர் வரையில் ஒரே நாளில் கடத்தப்பட்டனர். அன்றைய தினம் காத்தான்குடிப் பிரதேசம் தமிழீழ விடதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

எனது கணவர் காத்தான்குடி பிரதான வீதியில் நின்றவரையே ஒரு வாகனத்தில் கடத்தச் சென்றனர்.

எனது கணவர் உட்பட அந்த முப்பது பேரையும் தமிழீழ விடுதலைப்புலிகளே கடத்திச் சென்றதாக அறிந்தேன். அன்று கடத்தப்பட்ட எவருமே இதுவரை வீடு திரும்பவில்லை. 

எனது கணவரை நான் இழந்தது போல 3.8.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சியின் இரண்டு பள்ளிவாயல்களில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவத்தின் போதும் எனது குடும்ப உறவினர்கள் 16 பேரை இழந்தேன்.

இவ்வாறு எனது கணவரையும் எனது உறவினர்களையும் நான் இழந்துள்ளேன் என்றார்.

சித்தி சரீனா சாட்சியம்

இங்கு சாட்சியமளித்த காத்தான்குடியைச் சேர்ந்த அகமது லெவ்வை சித்தி சரீனா எனது கணவர் முகம்மது சித்தீக் என்பவர் 22.12.1985ம் திகதியன்று வீட்டிலிருந்து பாலையடிவேட்டைக்கு வியாபாரத்திற்கு சென்றார்.

வியாபாரத்திற்காக சென்ற எனது கணவர் வீடு வந்து சேரவில்லை. கணவர் கடத்தப்பட்டு விட்டார் என்ற தகவல் கிடைத்தது.

அவருடன் கூட வியாபாரத்திற்கு சென்ற ஐவரில் மூன்று போர் கடத்தப்பட்டனர் ஏனைய இருவரும் திரும்பி வந்தனர். திரும்பி வந்தர்களின் மூலம் எனது கணவர் கடத்தப்பட்டு விட்டார் என்ற தகவல் கிடைத்தது.

எனது கணவர் உடு துணிகள் வியாபாரம் செய்யும் ஒருவர் அவர் உடு துணிகளை வேன் ஒன்றில் ஏற்றிக் கொண்டு இவர்கள் வியாபாரத்திற்கு சென்றனர்.

இன்று அவர் உயிரோடு இல்லை. எனது கணவர் இல்லாததால் நான் எனது பிள்ளைகள் மிகவும் கஸ்டப்படுகின்றோம். எனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு.

 அன்று காணாமல் போன எனது கணவர் இது வரை வீடு வந்து சேரவில்லை என அவர் அழுது கொண்டு கூறினார்.

இங்கு சாட்சியளித்த காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது கலீல் எனது சகோதரர். அப்துல் அஸீஸ் முகம்மது சம்சுதீன் என்பவர் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் ஒரு ஊழியராக கடமையாற்றி வந்தார். அவருக்க வயது 35 அவர் திருமணம் செய்திருந்தார்.

19.11.1990ம் ஆண்டு  அவர் கடமையாற்றிய மாந்தீவு வைத்தியசாலையில் வைத்து கடத்தப்பட்டார்.

இவர் கடத்தப்பட்டார் என்ற செய்தி எமக்கு கிடைத்தவுடன் நாங்கள் பல இடங்களிலும் சென்று அவரை தேடினோhம் ஆனால் அவரை கடத்தியவர்கள் விடுவிக்கவில்லை.

எனது சகோதரர் கடத்தப்பட்டது அந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் மற்றும் ஊழியர்களுக்கு நன்கு தெரியும். எனது சகோதரர் அந்த வைத்தியசாலையில் தங்கியிருக்கும் போது அங்கு வந்த ஆயுதம் தரித்த சிலர் எனது சகோதரரின் பெயரைக் கூறி அவரை வெளியில் எடுத்து கடத்தச் சென்றுள்ளனர். இதுவரை எனது சகோதரர் வீடு திரும்பவில்லை என்றார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .