2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மகளிர் மகா சம்மேளனம் அமைப்பதற்கான கூட்டம்

Kogilavani   / 2014 ஜூன் 23 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் மகா சம்மேளனம் அமைப்பதற்கான கூட்டம் திங்கட்கிழமை (23) மாநகரசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.ஏம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மகளிர் சம்மேளனத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தலா 11 பெண்கள் விகிதம் 154 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 14 மகளிர் சம்மேளனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் பணியாற்றும் ஒவ்வொரு மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தரும், கொடையாளி நிறுவனங்களின் பிரதி நிதிகளும், மகளிர் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்;துகொண்டனர்.

மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி சந்திரசேகரம், இலங்கை அபிவிருத்திக்கான உதவி ஊக்க மையத்தின கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.சொர்ணலிங்கம், டயகோணியா நிறுவனத்தின் உத்தியோகத்தர் எஸ்.முருகவேல், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .