2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2014 ஜூன் 24 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்,-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிவில் குறுமண்வெளி வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கென்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த அழகுதுரை சபாநாதன்(வயது 49) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில்  வைக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .