2025 மே 01, வியாழக்கிழமை

சட்டபூர்வ ஆவணங்கள் வழங்கும் நடமாடும் சேவை விரைவில்: விமலராஜ்

Kanagaraj   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு,  களுதாவளை பிரதேசத்தில் 64 ஏக்கர் காணியில் குடியிருப்பவர்களுக்கான சட்டபூர்வ ஆவணங்கள் வழங்கும் பொருட்டு எமது தலைமைக் காரியாலய உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடனான நடமாடும் சேவை மிக விரைவில் நடாத்தப்படவுள்ளது என மட்டக்களப்பு, யாழப்பாண மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நே.விமலராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுதாவளையில் 64 ஏக்கர் காணியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள், தங்கள் காணிக்கான சட்டபூர்வ ஆவணம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் குறித்த பிரதேச மக்கள விடுத்த விண்ணப்பத்திற்கமைய, அமைச்சரால் எமது காரியாலயத்திற்கும்  தலைமைக் காரியாலயத்திற்கும் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக, அவர்களுக்கான உறுதி மிக விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வண்ணமுள்ளது.

இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதால் மேற்படி காணியில் வசிக்கும் சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பங்களிற்கு எமது தலைமைக் காரியாலய உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்புடனான நடமாடும் சேவை மிக விரைவில் நடாத்தப்பட்டு அவர்களுக்கான உறுதிகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பணிப்பாளர் மேலும்; தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .