2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 02 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் ரிதிதென்ன பிரதேசத்தில் இன்று  புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன  விபத்தில் ஓட்டமாவடி முதலாம் வட்டாரம் ஹஸரத் வீதியைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான  முஹம்மது இஸ்மாயில் முஹம்மது சரீப் நௌபர் (வயது 24) என்பவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் மீது பின்னால்; வந்த வான் ஒன்று மோதி இந்த  விபத்து  சம்பவித்தது.

விபத்தின்  பின்னர் குறித்த வான் நிற்காமல் சென்றதாக  விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில்  காயமடைந்த இவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து  மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.

இந்த  விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X