2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

உரக் களஞ்சியசாலைக்கு அடிக்கல் நாட்டல்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு, வாழைச்சேனை கமநலகேந்திர நிலையத்துக்கு உரக் களஞ்சியசாலை கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல்லை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று புதன்கிழமை (16) நாட்டி வைத்தார்.

04 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டடம்  அமைக்கப்படவுள்ளது.

இந்த  நிகழ்வில் பிரதேச விவசாயிகள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

கட்டப்படவுள்ள இக்கட்டடத்தில் 10,000 உர மூடைகளை அடுக்கி வைத்து பாதுகாக்கமுடியும் என்பதுடன்,  உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்க முடியும் எனவும் வாழைச்சேனை கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்;தர் எம்.ஏ.றசீட்  தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X