2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட்டு. மாநகரசபையில் கண்காட்சி

Suganthini Ratnam   / 2014 ஜூலை 22 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாநகரசபையின் சேவைகள் மற்றும் சிறப்புச் செயற்பாடுகள் தொடர்பில் அம்மாநகரசபையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) 7.2014) கண்காட்சி  நடைபெற்றது.

மாநகரசபையின் மாநகர விருதுகள் வைபவத்தின் முதல் நிகழ்வாக இக்கண்காட்சி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் சிவகீர்தா பிரபாகரன்,  மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாநகரசபையின் தீ அணைக்கும் இயந்திரத்தின் மூலம் தீ அணைப்பது எவ்வாறு என்பதை  மாநகரசபை தீ அணைக்கும் ஊழியர்கள் செய்து காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X