2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. மாநகரசபையின் விருது விழா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 23 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாநகரசபையின் விருது விழாவில் மாநகரசபைக்கு சிறப்பாக வரி செலுத்திய 243 பேர்   நேற்று செவ்வாய்க்கிழமை (22) பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன், ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கோபால் தம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,  கடந்த பத்தாண்டுகளில்  தொடர்ச்சியாக சிறப்பாக மாநகரசபைக்கு வரி செலுத்தியவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், மாநகரசபையின் வெற்றிக்கு பங்களித்த மக்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்களும் விருதுகள் வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.
 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X