2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோத பாலைமரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2014 ஜூலை 24 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, பொத்தானை புகையிரத கடவைக்கு அருகில்  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாலைமரக் குற்றிகளை  லொறியுடன்; இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை  கைப்பற்றியதாக  வாழைச்சேனை பெலிஸார் தெரிவித்தனர்.

பொத்தானை காட்டுப்பகுதியிலிருந்து ஓட்டமாவடியிலுள்ள மர ஆலைக்கு இந்த மரக் குற்றிகளை கொண்டுவரப்பட்டுள்ளன.
இதன்போது, பொத்தானை புகையிரத கடவைக்கு அருகில் பொலிஸாரை கண்ட லொறிச் சாரதி  லொறியை விட்டு  தப்பியோடியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், சந்தேக நபரை  கைதுசெய்வதற்கான  நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்;டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

18 தொடக்கம் 20 அடி வரை நீளமான பாலைமரக் குற்றிகள் 20 உள்ளன. இவற்றின் பெறுமதியை மதிப்பிடுவதற்கு வனவளத் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X