2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விபத்து: ஒருவர் படுகாயம்

Gavitha   / 2014 ஜூலை 28 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல் 

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கறைப்பற்றிலிருந்து ஆரையம்பதி நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது துவிச்சக்கர வண்டியில் சென்ற கிராங்குளத்தினைச் சேர்ந்த மனோகரன் (41) என்பவர் படுகாயமடைந்தவராவார்.

தற்போது அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் நிருவாகம் தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X