2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

காத்தான்குடியில் ஸுஹதாக்கள் தினம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல்,  ஹுஸைனியா பள்ளிவாசல் ஆகியவற்றில் தொழுகையின்போது படுகொலை செய்யப்பட்ட 103 பேரின் நினைவாக ஸுஹதாக்கள் தினம் காத்தான்குடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) அனுஷ்டிக்கப்பட்டது.

இவர்கள் 3.8.1990ம் ஆண்டு  படுகொலை செய்யப்பட்டனர்.

24ஆவது வருடமாக நினைவுகூறப்படும் ஸுஹதாக்கள் தினத்தையொட்டி காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசலில் குர்ஆன் ஓதப்பட்டதுடன், பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஸுஹதாக்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்  வழங்கப்பட்டன.

இதில் உலமாக்கள், பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X