2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

மட்டு மாவட்ட செயலகத்தை புதிய இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை புதிய இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பான ஆரம்பக்கட்ட விசேட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் திங்கட்கிழமை(04) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, புதிய கட்டத் தொகுதி அமையவுள்ள திராய்மடு பிரதேசத்தை, கலந்துரையாடலில் கலந்துகொண்ட குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

நேற்றைய கூட்டத்துக்கு, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.சி.கமம்பில்ல, அமைச்சின் பிரதம பொறியியலாளர் எஸ்.எம்.மடவலகம, அமைச்சின் திட்டப் பொறியியலாளர் பிராங்கி யு. பெரேரா ஆகியோர் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்தனர்.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் பொறியியலாளர் ஏ.சி.நிசார்டீன், மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் ஏ,வேல்மாணிக்கம், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை புதிய இடத்துக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதையடுத்து, புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X